துபாயில் இந்திய தூதரக அதிகாரிக்கு வரவேற்பு

நிகழ்விற்கு ஆலியா டிரேடிங் நிர்வாக இயக்குநர் நாகூர் ஷேக் தாவூத் மரைக்காயர் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் அசோகன் ஒரு மனிதநேயமிக்க அதிகாரி எனப் பெருமையுடன் குறிப்பிட்டார்.
ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, அபுதாபி பனியாஸ் டிரேடிங் நிர்வாக இயக்குநர் நாகூர் அப்துல் ஹமீது மரைக்காயர், துபாய் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதன், தாய்மண் வாசகர் வட்டத்தின் முத்தமிழ் வளவன், மதர் பிரீஜின் நிவேதிதா ஆனந்தன், அமீரக காயிதெ மில்லத் பேரவை பொதுச்செயலாளர் கும்பகோணம் ஏ. முஹம்மது தாஹா,
வானலை வளர்தமிழ் அமைப்பின் பொதுச்செயலாளர் சிம்மபாரதி, ரிதம் ஈவெண்ட்ஸ் சபேசன், தமிழ்நாடு பண்பாட்டுக் கழகத்தின் திருவிடச்சேரி எஸ்.எம். ஃபாரூக், வளைகுடா தமிழர் பேரவையின் சபீர் அலி, முதுகுளத்தூர்.காம் இணைய இதழின் முதுவை ஹிதாயத் வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் கோவிந்தராசு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
வாழ்த்துரையில் துபாய் இந்திய கன்சுலேட்டில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தபோது அசோகனின் சேவைகளை நினைவு கூர்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். அசோகன் அவர்கள் தனது ஏற்புரையில் அமீரக்த்தில் உள்ள இந்தியர்கள் உயர்ந்த உள்ளத்துக்குச் சொந்தக்காரர்கள். தான் பணிபுரிந்த காலத்தில் மிகுந்த அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். உலகின் எப்பகுதியில் இருந்தாலும் தன்னால் இயன்ற உதவிகளை எப்போதும் செய்திடத் தயாராய் இருப்பதாக நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.
வானலை வளர் தமிழ் அமைப்பின் ஆனந்தன் நன்றி கூறினார். சமூக ஆர்வலர் குத்தாலம் ஏ. அஷ்ரஃப் அலி நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.












Click it and Unblock the Notifications