துபாயில் இந்திய கல்வியாளர் பேராசிரியர் ஜியாவுல் ஹசனுக்கு வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் பாலிடெக்னிக் முன்னாள் முதல்வர் பேராசிரியர் ஜியாவுல் ஹசன் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 25-ம் தேதி மாலை பர்துபாய் எக்செல்சியர் கிரீக் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஆசிஃப் சயீத் கான் தலைமை வகித்தார். புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்று மூன்றே மாதத்தில் இந்நிகழ்வினை நடத்துவதாகக் குறிப்பிட்டார்.
பேராசிரியர் ஜியாவுல் ஹசனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய பேராசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தான் மேற்கொண்டு வரும் கல்விப் பணிகள் குறித்து விவரித்தார்.
பொதுச் செயலாளர் இஃப்திகார் அஹமது புதிய நிர்வாகக்குழு குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார். மேலும் வரும் காலங்களில் மேற்கொள்ளப்பட இருக்கும் பணிகள் குறித்தும் விவரித்தார்.
துணைத் தலைவர் ஃபாரூக் ஷம்சி நன்றியுரை நிகழ்த்தினார்.













Click it and Unblock the Notifications