தொடரும் சாரல்: களை கட்டிய குற்றால சீசன்- குவியும் சுற்றுலா பயணிகள்
Subscribe to Oneindia Tamil

குற்றாலத்தில் ஜூன் மாத இறுதியில் தொடர்ச்சியாக சாரல் இல்லாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறையத் துவங்கியது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக குற்றாலத்தில் சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்கத் தடை விதிக்கும் அளவுக்கு தண்ணீர் கொட்டியது. நேற்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் கொட்டுகிறது. ஐந்தருவியின் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் விழுகிறது.
பழைய குற்றாலத்திலும், புலியருவியிலும் தண்ணீர் நன்றாகக் கொட்டுகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இன்றும் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் குற்றால சீசன் மீண்டும் களை கட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications