திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
Subscribe to Oneindia Tamil

இந்தியாவில் புகழ் பெற்ற 5 சிவ ஸ்தலங்களில் முக்கியமானது அக்னி ஸ்தலம் என போற்றப்படும் திருவண்ணாமலை ஸ்தலம். திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அங்கு நடக்கும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓதி கொடியேற்றி திருவிழாவைத் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பாலச்சந்திரன், மாவட்ட கலெக்டர் மிஸ்ரா மற்றும் பல முக்கிய அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications