தமிழகத்தில் பல பல்கலைக்கழங்கள் தோற்றுவித்தவர் கருணாநிதி: அன்பழகன் புகழாரம்
நெல்லை: முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் பல்வேறு புதிய பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன என்று நெல்லை பல்கலைக்கழக விழாவில் நிதியமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
நெல்லை மனோ்ன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பெரியார் இருக்கை, அண்ணா இருக்கை துவக்கவிழா, தமிழ், ஆங்கிலம், கம்யூட்டர், பொறியியல், தகவல் தொழில்நுட்பதுறை மற்றும் பொறியியல் மையம், மாணவர் விடுதி, பேராசிரியர்கள் வளாகம் ஆகிய புதிய கட்டிடங்கள் திறப்பு விழா, திசையன்விளை, பணகுடி மனோ கல்லூரிகளில் புதிய வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் கருப்பசாமி பாண்டியன், மாலை ராஜா, அப்பாவு, மேயர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்கலைக்கழக துணை வேந்தர் சபாபதி மோகன் வரவேற்றார்.
தமிழக நிதியமைச்சர் அன்பழகன் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசியதாவது,
கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் ரூ.20 கோடி அளவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு கட்டிடங்கள், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கல்வி சமுதாயம் உருவாக வேண்டும் என்ற அடிப்படையில் கருணாநிதி ஆட்சி காலத்தில் தான் பாரதியார், பாரதிதாசன், திருவள்ளுவர், பெரியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
இளைய சமுதாயம் உயர் கல்வி பெற தொலைநோக்கு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். காலம் மாறி இருக்கிறது. அதற்கு ஏற்ப நாம் வளர வேண்டும். இளைஞர், இளம்பெண்கள் கல்வி கற்றால்தான் சமுதாய மாற்றம் ஏற்படும்.
தமிழகத்தில் பெரியாரும், அண்ணாவும் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தி தமிழர்களை தலை நிமிரச் செய்தனர். சமுதாய முன்னேற்றத்துக்கு பெரியார் சமுதாய வித்து எனில் அதில் உருவான ஆல விருட்சம் அண்ணா. இவ்வாறு அவர் பேசினார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications