Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று முதல் முதுமலை புலிகள் காப்பகம் திறப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

Tigers
கூடலூர்: வனவிலங்குகள் கணக்கெடுப்புக்காக மூடப்பட்ட முதுமலை புலிகள் காப்பகம் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

முதுமலை காப்பகம்:

தமிழகத்தில் உள்ள 6 புலிகள் காப்பகத்தில் முக்கியமானது முதுமலை புலிகள் காப்பகம். முதுமலையில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருது, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. வறட்சி மற்றும் வனத்தீ காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதுமலை காப்பகம் மூடப்பட்டது.

கணக்கெடுப்பு:

எதிர்பாராமல் பெய்த கோடை மழை காரணமாக காட்டின் பல இடங்களிலும் நீர் தேக்கம் ஏற்பட்டது. இதனால் கடந்த 1-ம் தேதி புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது. இந்நிலையில் வன விலங்கு கணக்கெடுப்பு பணிக்காக கடந்த 3-ம் தேதி மீண்டும் காப்பகம் மூடப்பட்டது. நேற்று வரை கணக்கெடுப்பு பணிகள் நடந்தன. கடைசி நாளான நேற்று வனவிலங்குகள் கணக்கெடுப்பு குறித்த விபரங்கள் சம்மந்தப்பட்ட குழுக்களிடம் இருந்து வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டன.

மீண்டும் திறப்பு:

வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படுகிறது என வனத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+