இன்று முதல் முதுமலை புலிகள் காப்பகம் திறப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

முதுமலை காப்பகம்:
தமிழகத்தில் உள்ள 6 புலிகள் காப்பகத்தில் முக்கியமானது முதுமலை புலிகள் காப்பகம். முதுமலையில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருது, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. வறட்சி மற்றும் வனத்தீ காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதுமலை காப்பகம் மூடப்பட்டது.
கணக்கெடுப்பு:
எதிர்பாராமல் பெய்த கோடை மழை காரணமாக காட்டின் பல இடங்களிலும் நீர் தேக்கம் ஏற்பட்டது. இதனால் கடந்த 1-ம் தேதி புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது. இந்நிலையில் வன விலங்கு கணக்கெடுப்பு பணிக்காக கடந்த 3-ம் தேதி மீண்டும் காப்பகம் மூடப்பட்டது. நேற்று வரை கணக்கெடுப்பு பணிகள் நடந்தன. கடைசி நாளான நேற்று வனவிலங்குகள் கணக்கெடுப்பு குறித்த விபரங்கள் சம்மந்தப்பட்ட குழுக்களிடம் இருந்து வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டன.
மீண்டும் திறப்பு:
வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படுகிறது என வனத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications