தூத்துக்குடியில் நவீன போர்க்கப்பல்கள்- மாணவ, மாணவிகள் பார்வையிட ஏற்பாடு
தூத்துக்குடி: இந்திய கடற்படை தினத்தையொட்டி தூத்துக்குடி துறைமுகத்தில் நவீன போர்க்கப்பல்களைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.
1971-ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின் போது கராச்சி துறைமுகத்தை இந்திய கப்பற்படை வெற்றி கொண்டதன் நினைவாக ஆண்டுதோறும் டிசம்பர் 4ம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு விஜயநாராயணம் ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தளத்தில் கடற்படை தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நவீன போர்க்கப்பல்கள்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடற்படை வீரர்கள் நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிக்கும் சேதக் ஹெலிகாப்டர் மூலம் சகாச நிகழ்ச்சி செய்து காட்டினர். சைக்கிள், நடைபயணம், இலவச மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதனையடுத்து விசாகப்பட்டிணத்திலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு பீரங்கி, விமான தளம் கொண்ட இரு நவீன போர்க்கப்பல் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த கப்பல்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications