+2 சிபிஎஸ்இ தேர்வில் 81 சதவீத மாணவ-மாணவியர் தேர்ச்சி: மாணவிகளே அதிகம் தேர்ச்சி
டெல்லி: இந்த ஆண்டு பிளஸ் டூ சிபிஎஸ்இ தேர்வில் 81 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்டூ சிபிஎஸ்இ தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. ஆனால் பாட்னாவுக்கான முடிவுகள் மட்டும் வெளியிடப்படவில்லை. இந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வு எழுதிய 7 லட்சத்து 70 ஆயிரத்து 43 பேரில் 81.71 சதவீத மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 1.84 சதவீதம் அதிகம்.
சென்னை 91.32 சதவீதம் தேர்ச்சி
மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 9.75 சதவீதம் கூடுதல் மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வு எழுதினர். மற்ற பகுதிகளை விட அதிகபட்சமாக 91.32 சதவீதம் சென்னை மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியவர்களில் 83.66 சதவீதம் பேரும், தனித்தேர்வர்களில் 45.41 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 85 சதவீத டெல்லி மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications