பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள் விழா

பேராசிரியர் கோ.விசயவேணுகோபால் தலைமை தாங்கினார். பிரஞ்சு நாட்டுத் தமிழறிஞர் ழான் லூய்க் செவ்வியார் அவர்கள் பெருமழைப்புலவரின் படத்தைத் திறந்து வைத்தார்.
திருவள்ளுவர் தவச்சாலை நிறுவுநர் முதுமுனைவர் இரா.இளங்குமரனார் அவர்கள் பெருமழைப்புலவரின் வாழ்க்கை, கல்வியார்வம், உரைச்சிறப்பு, சைவ சிந்தாந்தக் கழகத் தொடர்பு, உள்ளிட்ட பல செய்திகளை ஒரு மணி நேரம் நிரல்பட எடுத்துரைத்தார்.
புலவர் இ.திருநாவலன், புவர் நாகி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் முனைவர் மு.இளங்கோவன் வரவேற்புரையாற்ற, முனைவர் ஆ.மணி நன்றியுரையாற்றினார். தமிழாசிரியர் மூ. பூங்குன்றன் அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். புதுவைத் தமிழறிஞர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மேலைப்பெருமழையிலிருந்து புலவர் பொ.வே.சோமசுந்தரனாரின் மகன் சோ.பசுபதி அவர்களும், திரு.சிவபுண்ணியம் அவர்களும் வந்திருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும், கலந்துகொண்டவர்களுக்கும் வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications