போப் ஆண்டவரின் சிறப்பு தூதர் இன்று மாலை கன்னியாகுமரி வருகை
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: போப் ஆண்டவரின் இந்திய நாட்டிற்கான சிறப்பு தூதர் இன்று மாலை கன்னியாகுமரிக்கு வருகிறார்.
உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவராக இருப்பவர் போப் ஆண்டவர். போப் ஆண்டவரின் இந்திய நாட்டிற்கான சிறப்பு தூதர் சல்வடோர் பெனாச்சியோ இன்று (28 -ம் தேதி) மாலை 6.30 மணி அளவில் கோட்டார் சேவியர் ஆலயத்திற்கு வருகிறார். அங்கு அவர் கிறிஸ்தவ மக்கள் முன்னிலையில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றுகிறார்.
முன்னதாக அவருக்கு சேவியர் ஆலய சந்திப்பில் இருந்து ஆலய வளாகம் வரை சிவப்பு கம்பளம் விரித்து இன்னிசை வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மதுரை பேராயர் பீட்டர் பெர்னாண்டோ, கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.












Click it and Unblock the Notifications