For Daily Alerts
Just In
வருகிறது சுதந்திர தினம்- சிவகாசியில் தேசியக் கொடி தயாரிப்பு மும்முரம்
ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தேசிய கொடிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தயார் செய்யப்பட்டாலும் சிவகாசி பகுதியிலுள்ள அச்சகங்களில் தயாரிக்கப்படும் கொடிகள் தான் பெரும்பாலும் நாடு முழுவதும் பட்டொளி வீசி பறந்து வருகின்றன.
இந்தாண்டு சுதந்திர தின கொண்டாடத்திற்காக சிவகாசியில் உள்ள அச்சகங்களில் தேசிய கொடி தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கொடி கம்பத்தில் பறக்கவிடப்படும் துணி கொடி, காகித அட்டை கொடி, பிளாஸ்டிக் கொடி, ஸ்டிரா தேசிய கொடி, ஸ்டிக் பைல் தேசிய கொடி, ஸ்டாண்ட் தேசிய கொடி, ஐடி கார்டு தேசிய கொடி, டபுள் சைடு தேசிய கொடி, போன்ற பல்வேறு வடிவங்களில் தேசிய கொடி தயாரிக்கப்படுகிறது. இவைகளை மாநிலம் முழுவதும் அனுப்பும் பணியும் மும்முரமாக நடந்து வருகின்றன.
Comments
English summary
Printing of National flags in SIvakasi printing houses are on full swing. Various type of Flags are being printed here.
Story first published: Thursday, August 4, 2011, 18:28 [IST]