நெற்கட்டும் செவலில் பூலித்தேவனின் 296-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
புளியங்குடி: புளியங்குடி அருகே நெற்கட்டும் செவலில் மாமன்னர் பூலித்தேவரின் 296வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெல்கட்டும் செவலில் வெள்ளையர்களை எதிர்த்து முதன் முதலாக குரல் கொடுத்த மாமன்னர் பூலிதேவரின் 296-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதற்கு மாமன்னர் பூலித்தேவர் நினைவு அறக்கட்டளை தலைவர் ம. நடராசன் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் பொருளாளர் அ. வேலாயுதசாமி வரவேற்புரை ஆற்றினார்.
அப்போது அறக்கட்டளை தலைவர் நடராசன் பேசியதாவது,
கடந்த 15 ஆண்டுகளாக நெற்கட்டும் செவலில் மாமன்னர் பூலித்தேவர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 300-வது ஆண்டு விழா வெகுவிமரிசையாக கன்னியாகுமரியில் தொடங்கி இங்கு வரை நடத்த முடிவு செய்துள்ளேன். கடந்த மாதம் இங்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து எனக்கு தெரிய வந்தது. வரலாற்றை யாரும் மாற்றி அமைக்க முடியாது. பிரச்சனையின் போது அமைதி காத்த உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிலர் சுவரொட்டிகள், பெயிண்டால் எழுதினால் அது வரலாறு ஆகாது.
மாமன்னர் பூலித்தேவர் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தை எதிர்த்தவர். ஆங்கிலேய எழுத்தாளர் கால்டுவேல் எழுதிய புத்தகக்தில் இங்குள்ள 12 பாளையங்களின் சிறப்புகளை குறிப்பிட்டுள்ளார். மாற்று சமுதாயத்தினரை நாம் மதிக்கிறோம். அனைத்து சமுதாயத்தினரிடமும் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம். பூலித்தேவனின் மூதாதையர்கள் 1378-ம் ஆண்டு முதல் 1726-ம் ஆண்டு வரை இப்பகுதியை ஆட்சி செய்துள்ளனர். 10வது மாமன்னராக பூலித்தேவன் பதவியேற்று 1726-ம் ஆண்டு முதல் 1756-ம் ஆண்டு வரை ஆட்சி செய்ததற்கான வரலாறு உள்ளது.
ஒண்டிவீரன் என்ற பெயரிலேயே வீரன் என்ற அடைமொழி இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஆங்கிலேய கோட்டைக்குள் ஒண்டியாக சென்றதால் தான் ஒண்டி வீரன் என்ற பெயர் வந்தது. சிந்து பாடல்கள் என்னும் தொகுப்பில் பூலித்தேவன் குறித்த வாரிசுகளே அதற்கு சான்றாகும். எனவே, இப்பகுதி மக்கள் பிரச்சனையில் ஈடுபடாமல் தங்களது குழந்தைகளை படிக்க வைத்து மேதைகளாக்க வேண்டும் என்றார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications