இன்று துபாயில் குடும்ப உறவுகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் இன்று( 9ம் தேதி) இரவு இஷா தொழுகைக்குப் பின்னர் 8.30 மணிக்கு அஸ்கான் டி பிளாக்கில் குடும்ப உறவுகள் எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
துபாயில் உள்ள அஸ்கான் டி பிளாக்கில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் குடும்ப உறவுகள் எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று இரவு 8. 30 மணிக்கு நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் மனநல ஆலோசகரும், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும நலத்துறை மேலாளருமான ஜனாப் முஹைதீன் பாட்சா மற்றும் முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் காக்கா ஆகியோர் உரை நிகழ்த்தவிருக்கின்றனர்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications