இந்திய பத்திரிகையாளர் சங்க தலைவராக சுரேஷ் அக்கவுரி தேர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவராக சுரேஷ் அக்கவுரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்க தலைவர் தேர்தல் ஆமதாபாத்தில் நேற்று நடந்தது. இதில் டெல்லி பத்திரிக்கையாளர்கள் சங்க தலைவரான சுரேஷ் அக்கவுரி, மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சுரேஷ் அக்கவுரியை எதிர்த்து கேரள பத்திரிக்கையாளர் சங்க தலைவர் ஜி.பிரபாகரன் போட்டியிட்டார். இந்தப் போட்டியில் தோற்றாலும், சங்கத்தின் பொதுச் செயலாளராக பிரபாகரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியப் பத்திரிகையாளர் சங்கத்தில் நாடு முழுவதிலும் உள்ள 15000 க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் உறுப்பினராக உள்ளனர்.












Click it and Unblock the Notifications