சர்வதேச சித்திரவதை நாள்-லண்டனில் 26ம் தேதி பிரதமர் அலுவலகம் முன்பு தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
சர்வதேச சித்திரவதை நாள்-லண்டனில் 26ம் தேதி பிரதமர் அலுவலகம் முன்பு தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
லணட்ன்: சர்வதேச சித்திரவதை நாளையொட்டி, 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, மாலை 4 மணி முதல் 7 மணி வரை பிரதமர் அலுவலகம் முன்பு தமிழர்கள் ஆர்ப்பாட்டப் போராட்டம் நடத்திடவுள்ளனர்.
லண்டன் டவுனிங் தெருவில் உள்ள பிரதமர் டேவிட் காமரூனின் இல்ல-அலுவலகம் முன்பு இந் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கொலை சித்திரவதை கற்பழிப்பு அடக்குமுறை சொத்தழிப்பு என சொல்லணாத் துயரங்களால் துன்பப்படுகின்ற இக்கால கட்டத்தில் தஞ்சம் கோரி இங்கிலாந்திற்கு வந்துள்ள ஈழத்தமிழர்களை இனவெறிபிடித்த இலங்கை அரசின் கரங்களில் ஒப்படைப்பதைத் தடுத்து நிறுத்திட இன உணர்வுடன் ஒன்றுதிரண்டு குரல் கொடுப்போம் என புகலிடம் தேடும் தமிழர்களின் நடவடிக்கைக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
மேலதிக விவரங்களுக்கு கரன் - 078 75 63 30 64, ரஞ்சன் - 078 46 79 11 53 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications