கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: கடைசி நாள் டிச.30

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்காக வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருதினை பெற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் பொதுத்துறைச் செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஒரு சாதி, இனம், வகுப்பை சேர்ந்தவர்கள் பிற சாதி, இன வகுப்பை சேர்ந்தவர்களையோ அல்லது அவர்களின் உடைமைகளையோ வகுப்பு கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றுவோரின் உடல் மற்றும் மனவலிமையை பாராட்டும் வகையில் சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. மூன்று பேருக்கு ரூ.20,000, ரூ.10,000, ரூ.5,000 வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

2012ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு தேவையான ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் மூலமாக செயலாளர், பொதுத்துறை, தலைமைச்செயலகம், சென்னை-9'' என்ற முகவரிக்கு வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரசால் அமைக்கப்படும் தேர்வுக்குழு விருதுக்கு தகுதியுள்ளவர்களை தேர்வு செய்யும். அவர்களுக்கு குடியரசு தினத்தன்று முதல்வர் விருது மற்றும் பதக்கம் வழங்கி கவுரவிப்பார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+