சக மனிதர்களின் கண்ணீரைத் துடைக்கட்டும் சித்திரைத் திருநாள்-வைகோ
சென்னை: சக மனிதர்களின் கண்ணீரைத் துடைக்கின்ற வகையில், சாதி, மத பேதங்கள் இல்லாத சகோதரத்துவம் தழைக்க, தமிழக மக்கள் உறுதி ஏற்போம் என்று சித்திரைத் திருநாள் வாழ்த்துச் செய்தியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து வைகோ வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
நெருப்பாகத் தகிக்கும் அனல் வெயிலோடு தொடங்கும் சித்திரை முதல் நாளைக் கொண்டாடும் வழக்கம், தமிழ்நாட்டு மக்களிடம் தொடர்ந்து வருகிறது. மதுரை மூதூரில், லட்சக்கணக்கான மக்கள் கூடும் சித்திரைத் திருவிழா நடக்கிறது.
சித்திரைத் திங்களில் முழுநிலவு நாளில், காவிரிப்பூம்பட்டினத்து மக்கள் கடற்கரையில் கூடி, இந்திர விழா கொண்டாடியதாக, சிலப்பதிகாரம் கூறுகிறது.
இந்திய நாட்டின் அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதை, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவீசும் விடிவெள்ளியான அண்ணல் டாக்டர் அம்பேத்கர் பிறந்த திருநாளாகிய ஏப்ரல் 14 ஆம் நாளில், சக மனிதர்களின் கண்ணீரைத் துடைக்கின்ற வகையில், சாதி, மத பேதங்கள் இல்லாத சகோதரத்துவம் தழைக்க, தமிழக மக்கள் உறுதி ஏற்போம் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications