ரூ.63 லட்சம் மதிப்பிலான பணிகளை முடிந்தது- வேடந்தாங்கல் சீசனுக்கு ரெடி
மதுராந்தகம்: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான முக்கிய பணிகள் செய்து முடித்து, சீசனை வரவேற்க சரணாலய அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வேடந்தாங்கலில் பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் இங்கு சீசன் துவங்குகிறது. சீசனில் பல ஆயிரக்கணக்கான கி.மீ.,களை கடந்து வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகள், இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன. அதன்பின் குஞ்சுகள் பறக்கும் தன்மையை பெற்றவுடன் அவை சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றன.
மொத்தம் 73 சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் ஏரியில் நிலவும் தட்பவெப்பநிலை வெளிநாட்டு பறவைகளுக்கு இனம்பெருக்கம் செய்ய தகுந்ததாக உள்ளன. சீசன் துவங்கும் முன், வெளிநாட்டு பறவைகள் வந்து கூடு கட்ட தேவையான தகவமைப்பை, சரணாலய அதிகாரிகள் மேற்கொள்கின்றனர்.
பலவகையான மரக்கன்றுகள் நடப்பட்டு, ஏரியில் பறவைகளின் இரைக்காக மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. இந்தாண்டு 63 லட்சம் ரூபாய் மதிப்பில் சீசனை வரவேற்க தேவையான பணிகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் சீசன் நாட்களில், பறவைகள் மற்றும் இயற்கை அமைப்பை கண்டு களிக்க வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்காக கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உயர்ந்த தொலைநோக்கியுடன் பார்வையாளர் கோபுரம், ஏரிக்கரையில் நடந்த செல்லும் வகையில், கல்பதிக்கப்பட்டு, 40 இருக்கைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் நவீன கழிப்பிட வசதி, குடிநீர் தொட்டி, பயணிகள் கருத்து விளக்க மையம் என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக சுற்றுலா துறையின் சார்பில், பறவைகள் விளக்கப்படம், தொடுதிரையில் தொடப்படும் 30 பறவைகளின் ஒலியை கேட்கும் வசதி உள்ளது.
வேடந்தாங்கல் பறவைகளின் சரணாலயத்தை கண்டுகளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், சராணாலயத்தை பராமரித்து வரும் வனத்துறைக்கு பார்வையாளர்கள் மூலம் நல்ல வருவாயை கிடைக்கிறது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications