செம்மசிங்கர் 2012: 23, 24ல் துபாயில் குழந்தைகளுக்கான குரல் தேர்வு
Subscribe to Oneindia Tamil
துபாய்: செம்மசிங்கர் 2012, துபாய் நிகழ்ச்சிக்காக ஸ்மைல் எனும் அமைப்பின் சார்பில் குழந்தைகளுக்கான குரல் தேர்வு வரும் 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் கராமா சென்டரில் நடக்க இருக்கிறது என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ரேடியோ ஹலோ 89.5 எப்எம் செம்மசிங்கர் 2012 என்னும் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான குரல் தேர்வு வரும் 23, 24 ஆகிய தேதிகளில் துபாய் கராமா சென்டரில் நடக்கிறது. ஸ்மைல் என்னும் அமைப்பு நடத்தும் இதில் 15 வயதிற்குட்ப்ட சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு தங்கள் குரல் வளத்தை நிரூபிக்கலாம்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் 055-2312870 எனும் எண்ணிலோ அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications