ஷார்ஜாவில் நடந்த தமிழ் புத்தகக் கண்காட்சி
ஐக்கிய அரபுநாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் புரவலர் திரு. சேது வள்ளியப்பன் அவர்கள் விழாவுக்கு தலைமை தாங்கினார். தமிழ்த்தாய் வாழ்த்துக்குபின் தமிழ்நாடு பண்பாட்டு கழகத்தின் தலைவர் திரு. ராமலிங்கம் 'வளமான தமிழ்' எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
ஐக்கிய அரபுநாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் திரு. ரமேஷ் ராமநாதன் அவர்களும், புரவலர் திரு. ராம நாகப்பன் அவர்களும்.சிறப்புரை ஆற்றினார்கள். மணிமேகலை பிரசுரத்தாரின் சார்பில் திரு. ரவி தமிழ்வாணன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்.
நகரத்தார் கூட்டமைப்பின் செயலாளர் திரு. கதிரேசன் முத்துராமன் மணிமேகலை பிரசுரத்தாருக்கும், அல் கத்தரி பண்ணை வீடு ஏற்பாடு செய்த சேது வள்ளியப்பன் அவர்களுக்கும் வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
மாலை தேநீர் மற்றும் இரவு உணவுக்கு நகரத்தார் கூட்டமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.













Click it and Unblock the Notifications