For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷார்ஜாவில் நடந்த தமிழ் புத்தகக் கண்காட்சி

By Siva
Google Oneindia Tamil News

ஷார்ஜா: ஷார்ஜாவில் மணிமேகலை பிரசுரத்தாரின் புத்தக விற்பனைக் கண்காட்சி அல் கத்தரி பண்ணையில் ஐக்கிய அரபுநாடுகள் நகரத்தார் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு பண்பாட்டு கழகத்தின் ஆதரவில் 12.4.2012 அன்று மாலை விமரிசையாக நடந்தது.

ஐக்கிய அரபுநாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் புரவலர் திரு. சேது வள்ளியப்பன் அவர்கள் விழாவுக்கு தலைமை தாங்கினார். தமிழ்த்தாய் வாழ்த்துக்குபின் தமிழ்நாடு பண்பாட்டு கழகத்தின் தலைவர் திரு. ராமலிங்கம் 'வளமான தமிழ்' எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

ஐக்கிய அரபுநாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் திரு. ரமேஷ் ராமநாதன் அவர்களும், புரவலர் திரு. ராம நாகப்பன் அவர்களும்.சிறப்புரை ஆற்றினார்கள். மணிமேகலை பிரசுரத்தாரின் சார்பில் திரு. ரவி தமிழ்வாணன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்.

நகரத்தார் கூட்டமைப்பின் செயலாளர் திரு. கதிரேசன் முத்துராமன் மணிமேகலை பிரசுரத்தாருக்கும், அல் கத்தரி பண்ணை வீடு ஏற்பாடு செய்த சேது வள்ளியப்பன் அவர்களுக்கும் வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

மாலை தேநீர் மற்றும் இரவு உணவுக்கு நகரத்தார் கூட்டமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

English summary
Manimekalai prasuram's book fair was held at Al Qattari farm house in Sharjah on april 12.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X