அவ்வை தமிழ்ச் சங்கத்தின் இந்திய நடனக் கலை விழா மற்றும் ஆற்றல் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் தொண்டுசேவை சமாசம் நொய்டா கடந்த ஜனவரி மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இந்திய நடனக் கலை விழா மற்றும் ஆற்றல் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நொய்டாவில் உள்ள தி கிரேட் இந்தியா ப்ளேஸ் வர்த்தக வளாகத்தில் நடத்தியது.
“இந்தியாவைப் பற்றி இந்தியர்களுக்கு” எனும் தொகுப்பில் 4வது முறையாக நடத்தப்படட் இந்த ஆண்டு விழாவில் பல கலை நிகழ்ச்சிகள் “ஆற்றல் சேமிப்பை” வலியுறுத்தும் விதமாக நடைபெற்றது. இரு நாட்களாக நடந்த நிகழ்ச்சியில் இப்பகுதியைச் சேர்ந்த நடனப் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை பலர் கண்டு களித்தனர். இதில் 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியின்போது எடுத்த புகைப்படங்களை கீழ்கண்ட இணைப்பைக் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications