துபாய் தமிழ்த்துளி அமைப்பின் மனிதாபிமான சேவை

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய் தமிழ்த்துளி அமைப்பினர் தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக எழுதுபொருட்களை சேகரித்துள்ளனர். இதை விரைவில் தமிழகம் வந்து வழங்கவிருக்கின்றனர்.

துபாய் தமிழ்த்துளி அமைப்பினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக பேனா, பென்சில், ரப்பர் போன்ற எழுதுபொருட்களை சேகரித்துள்ளனர்.

விரைவில் தமிழகம் சென்று இவற்றினை நேரடியாக வழங்க உள்ளதாக அமைப்பின் தலைவி பிரியா விஜய் தெரிவித்துள்ளார். இப்பணிக்கு பல்வேறு நல்லுங்கள் உதவியதற்காக அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பினர் பார்வையற்ற மாணவர்களுக்கென பிரத்யேக எழுதுபொருட்களையும் சேகரித்து வழங்கவிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+