துபாயில் இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு நேற்று மாலை துபாயில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்தில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றார். அங்கு அவருக்கு துபாய் முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நேற்று(29ம் தேதி) மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு முத்தமிழ்ச் சங்க தலைவர் மோகன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் டாக்டர் ராஜன், ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தனக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததற்கு கங்கை அமரன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.













Click it and Unblock the Notifications