3ல் துபாயில் ஈமான் அமைப்பின் மாபெரும் மீலாத் பெருவிழா
இந்த விழாவுக்கு ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் தலைமை வகிக்கிறார். துபாய் இஸ்லாமிய விவகாரத் துறையின் துணை இயக்குநர் முனைவர் உமர் எம். அல் கத்தீப் முன்னிலை வகிக்கிறார். ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளார் குற்றாலம் ஏ. லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
தாயகத்திலிருந்து வருகை தரும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் இணைச் செயலாளர், மூன் டிவி புகழ் முனைவர் அன்வர் பாதுஷா உலவி விழாப் பேருரையினை நிகழ்த்துகிறார்.
பள்ளியின் மேல்தளத்தில் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளதாக துணை பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் அனைவரும் கலந்து கொண்டு நற்பயன் அடையுமாறு விழாக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 055 800 79 09 / 050 51 96 433 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.