டின்னர் சாப்பிடும்போது செல்போன் பேசாதீங்க! எச்சரிக்கை!!

யாரோ ஒருவருடன் செல்போனில் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் வீட்டில் உள்ளவர்களுடன் முகம் கொடுத்து பேச மறந்துவிடுவார்கள். இதுதான் பெரும்பாலான வீடுகளில் இன்றைய நிலை.
செல்போன்கள் எத்தனையோ குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாம்.எசேக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல்துறை பேராசிரியர்கள் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் உணவருந்தும் போது யாராவது ஒருகையில் சாப்பாடும் மறுகையில் செல்போனும் வைத்துப் பேசிக்கொண்டிருந்தால் துணையின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்கின்றனர் நிபுணர்கள்.
செல்போன் உலகளவில் இணைக்கும் தகவல் தொடர்பு சாதனமாக இருந்தாலும் வீட்டிற்குள் உள்ளவர்கள் முகத்தோடு முகம் நோக்கி பேசும் நேரத்தை குறைத்துவிடுகிறதாம். எனவேதான் இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி குடும்ப உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்திவிடுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
எனவே செல்போனை அவசியமான நேரத்திற்குப் மட்டும் பயன்படுத்திவிட்டு வீட்டில் இருக்கும் போது குறிப்பாக குடும்பத்தினருடன் உணவருந்தும் போது சுவிட்ச் ஆஃப் செய்து விடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications