துபாயில் திருக்குர்ஆன் மனனப் போட்டி துவக்கம்: பல நாடுகளில் உள்ள இந்திய வம்சாவழியினர் பலர் பங்கேற்பு
ஹிஜ்ரி 1419 (1998) முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இப்போட்டி 16வது ஆண்டாக இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. கடந்த 27ம் தேதி நடைபெற்ற போட்டியில் அப்பாஸ் அப்திநாஸிர் முஅல்லிம் அஹ்மது (லண்டன்), அய்னுல் ஆரிஃபின் (வங்கதேசம்), அப்துல் ரஹ்மான் மஹ்மூத் ஃபாரிஸ் கலஃப் (ஜோர்டான்), லாஃபிர் அப்துல்லாஹ் லாஃபிர் (இலங்கை), எல். ஹஜ்டி டிரேம் (மாலி), அஹமது இப்ராஹிம் முஹம்மது ஹலனி (டென்மார்க்), ஹசன் கடோன்கோலி (உகாண்டா), உமரி அப்துல்லாஹ் சலிம் (டான்சானியா) ஆகியோர் பங்கேற்றனர்.
28.07.2012 அன்று நடந்த போட்டியில் அப்துர் ரஹ்மான் தௌக்கனி (இத்தாலி), சமர் முவஃபக் ஆபித் அல் குபைஸி (ஈராக்கைச் சேர்ந்த கண் பார்வைக் குறைபாடுடையவர்), முஹம்மது தல்ஹா சர்ஜீல் ராஹத் (பாகிஸ்தான்), அப்துல் ரஹ்மான் அலி அப்துல் ரஹ்மான் ராஷித் அல் ரஃபி (பஹ்ரைன்), முஃப்தி சரோ முஹம்மது யாசின் (பிலிப்பைன்ஸ்), அப்பாஸ் முஹம்மது சலிசு ஜக்கரியா (நைஜிரீயா), சௌபியன் இகாசோரா (நெதர்லாந்து) மற்றும் அபிஸிட் மடங் (தாய்லாந்து) ஆகியோர் பங்கேற்றனர்.
திருக்குர்ஆன் சர்வதேச விருது வழங்கும் குழுவில் தமிழகத்தின் மதுக்கூரைச் சேர்ந்த நூருல் அமீன் என்ற ஒரே தமிழரே இடம் பெற்றுள்ளது தமிழக முஸ்லிம்களுக்கு பெருமையளிக்கும் செய்தியாகும்.













Click it and Unblock the Notifications