இன்று துபாயில் 'நம்பிக்கையும் நடப்பும்' சிறப்பு சொற்பொழிவு
துபாய்: துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை இன்று(11ம் தேதி) மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் 8.45 மணியளவில் அஸ்கான் டி பிளாக்கில் ‘நம்பிக்கையும் நடப்பும்’ எனும் தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சியினை நடத்த இருக்கிறது.
பன்னூலாசிரியர் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது சிறப்புச் சொற்பொழிவாற்றுகிறார். அவர் ஆசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். எழுத்துப் பணிக்காக பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இரண்டு கவிதை நூல்கள், பத்து நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியுள்ளார். மேலும் அவர் பல்வேறு ஆக்கங்களை பல இதழ்களில் எழுதி வருகிறார்.
சென்னை சீதக்காதி அறக்கட்டளை, இஸ்லாமிய இலக்கியக் கழகம், திருச்சி இஸ்லாமிய ஆராய்ச்சி மற்றும் கலாச்சார மையம், கலைமான் அறக்கட்டளை மற்றும் கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஆகியவற்றின் விருதுகளைப் பெற்றவர்.
மலேசியா, சிங்கப்பூர், புருணை, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்தவர். அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்காக எழுத்தாலும், பேச்சாலும் தனது வாழ்வினை அர்ப்பணித்துள்ளார்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 050 51 96 433 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications