For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக நன்மைக்காக நாளை சிறப்பு பிரார்த்தனை

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: காயல்பட்டிணம் புனித மஜ்லிஸுல் புகாரி ஷரிப்பின் 85வது ஆண்டு வைபவத்தை முன்னிட்டு நாளை உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொள்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புனித மஜ்லிஸுல் புகாரி ஷரிப்பின் 85வது ஆண்டு விழா கடந்த மாதம் 25ம் தேதி துவங்கியது. ஒரு மாதம் நடந்து கொண்டிருக்கும் இந்த விழா நாளையுடன் நிறைவடைகிறது. விழாவின் இறுதி நாளான நாளை காலை 10.30 மணிக்கு உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.

இந்த பிரார்த்தனை கூட்டத்தை காயல்பட்டிணம் ஜாவியா அரபிக் கல்லூரி முதல்வர் ஹம்மது பாரூக் ஆலிம் பாஸி நடத்துகிறார். இப்பிரார்த்தனையில் தமிழகத்தின் பல பகுதிகளில் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொள்கின்றனர்.

English summary
Special prayer meet will be held in Kayalpatnam masjid tomorrow for the goodness of the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X