துபாயில் தமிழ்த்துளி முதலாம் ஆண்டு விழா
துபாய்: துபாயில் தமிழ்த்துளி அமைப்பின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் 23ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை ஒரு இனிய பயணமாக கொண்டாடப்பட இருக்கிறது என அதன் நிறுவன தலைவி பிரியா விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்துளியின் அங்கத்தினர்கள் தங்களது குடும்பத்தினருடன் துபாய் அல் கிஸஸ் கிராண்ட் ஹோட்டலில் இருந்து 23.03.2012 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு பேருந்து மூலம் அபுதாபி செல்லும் வழியில் உள்ள சஹாமா குழந்தைகள் மிருகக்காட்சி சாலை மற்றும் பூங்காவிற்கு (Sahama Kid's Zoo Park ) அழைத்துச் செல்லப்படுவர்.
பேருந்து பயணத்தின் போது குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தமிழ் நீதிக்கதைகள், நகைச்சுவை கதைகள் கூறுவதோடு, பாட்டுக்குப் பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மதியம் தமிழ் பாரம்பரிய உணவு வழங்கப்படும்.
மாலையில் துபாய் திரும்பிய பின்னர் தேரா நாசர் சதுக்கத்தில் உள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. தமிழ் மொழியைப் பற்றிய ஒரு காணொளி விளக்கம், தமிழ்த்துளியின் ஓராண்டுப் பயணம் பற்றிய காணொளி,சிறப்பு விருந்தினர் உரை, உறுப்பினர்களுக்கான சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் உறுப்பினர்களும், உறுப்பினர் அல்லாதவர்களும் வரும் 15ம் தேதிக்குள் 050 7472432 மற்றும் 055 5571985 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications