4ம் தேதி சவுதி அரேபியாவின் ஜுபைலில் உருது மொழிக் கவியரங்கம்
Subscribe to Oneindia Tamil
ஜுபைல்: அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் சவூதி அரேபியாவின் ஜுபைல் நகரில் வரும் 4ம் தேதி உருது மொழிக் கவியரங்கம் நடைபெறுகிறது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தின் உருது மொழிக் கவியரங்கம் சவூதி அரேபியாவின் ஜுபைல் நகரில் வரும் 4ம் தேதி மாலை 7.30 மணிக்கு யுனைடெட் பெட்ரோகெமிக்கல் கம்பெனியின் பீச் கேம்பில் நடைபெற இருக்கிறது.
இந்த கவியரங்கில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கவியரங்கின் தலைவர் மீராஜ் ஏ. அன்சாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 050-6816138 / 0504638132 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications