24ல் துபாயில் வி.களத்தூர் சங்கமம் 2012

Subscribe to Oneindia Tamil

Kalathur Sangamam
துபாய்: துபாயில் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் மற்றும் மில்லத் நகர் மக்கள் சங்கமிக்கும் வி.களத்தூர் சங்கமம் 2012 எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் 24ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை முஷ்ரிஃப் பூங்காவில் நடைபெற இருக்கிறது என சங்க தலைவர் ஹெச். சர்புதீன் தெரிவித்துள்ளார்.

அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் மற்றும் மில்லத் நகரைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

வருடத்திற்கு ஒருமுறையாவது வி.களத்தூர் மற்றும் மில்லத் நகர் வாசிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தங்களது உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகிறது இந்த வி.களத்தூர் சங்கமம் என சங்க தலைவர் ஹெச். சர்புதீன் தெரிவித்தார்.

கலந்துரையாடல் மட்டுமல்லாது விளையாட்டுப் போட்டிகள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இச்சங்கமத்தில் இடம்பெற்றுள்ளன.

உணவு, பேருந்து மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தித் தர வசதியாக 055 2639174 / 050 387 84 21 / 050 344 0786 ஆகிய எண்களில் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+