துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் முப்பெரும் விழா

இவ்விழாவில் ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டு கழக தலைவர் ராமலிங்கத்தை பாராட்டும் தமிழ்த்தேர் இதழின் 70வது இதழாக நம்பிக்கை சிறப்பிதழ் வெளியீடு மற்றும் நம்பிக்கை எனும் தலைப்பில் கவியரங்கம் ஆகியவை நடைபெற்றன.
ஆனிஷாவின் இனிய குரலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. முதல் கட்டமாக நடைபெற்ற கவியரங்க நிகழ்ச்சிக்கு தமிழ்த்தேர் இதழின் பதிப்பாசிரியர் ஜியாவுதீன் தலைமை தாங்கினார்.
மகளிருக்கு முதலிடம் அளிக்கும் வகையில் மீனாகுமாரி பத்மநாதன், நர்கீஸ் ஜியா ஆகியோரின் கவிதைகளை தொடர்ந்து, நம்பிக்கை நாகராஜ், விருதை செய்யது ஹுசேன், ஜெயராமன் ஆனந்தி, முகவை முகில், காவிரி மைந்தன், கவியன்பன் கலாம், திண்டுக்கல் ஜமால், குத்தலாம் அஸ்ரப் ஆகியோருடன் ஜியாவுதீன் கவிதை வழங்கினார். இதன்மூலம் கருத்துக்கள் பொழிந்த மழையாய் கவியரங்கம் நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியில் ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டு கழக தலைவர் ராமலிங்கம் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். துணை தலைவர் லிங்கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்த்தேர் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.
அமீரகத்தில் தமிழ் அமைப்புகள் அதிக இல்லாத காலத்தில் கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் மூலம் மக்களை ஒன்றிணைக்கவும், இயன்ற வரையில் உதவிகள் புரியவும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்தும், மக்களுக்கு சரிவிகித கலவையாய் கலை நிகழ்ச்சிகள் வழங்குவதில் முன்னோடியாய் விளங்கிய ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டு கழகத்தை கடந்த 32 ஆண்டுகளாக முன்னின்று நடத்தி சென்றவர் ராமலிங்கம்.
இன்முகத்தோடு அனைவரையும் கவர்ந்து, இனிய பண்பாளர் என்ற பாராட்டை பெற்ற அவரை குறித்து, தமிழகத்தில் இருந்து ஏம்பல் தஜம்முல் முஹம்மது இயற்றிய கவிதையை அப்துல் லதீப் வாசித்தார். அமீரகத்தின் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இவ்விழாவில் தாய்மண் வாசகர் வட்டம் சார்பில் பட்டணம் மணி வாழ்த்துரை வழங்கினார்.
அமீரகத்தமிழ் மன்றம் சார்பில் ஆசிப் மீரான் வாழ்த்து உரையாற்றினார். துபாய் மகளிர் வட்டம் சார்பில் மீனாகுமாரி பத்மநாதன், தமிழ்நாடு பண்பாட்டு கழகம் சார்பில் எழிலரசன், லிங்கண்ணன் மற்றும் வெங்கட் ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
வானலை வளர்தமிழ் சார்பில் அதன் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் இணைச்செயலாளர் கீழைராசா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துபாய்-தமிழ்நாடு பண்பாட்டு கழக தலைவராக தாம் பணியாற்றிய ஆண்டுகளில் ராமலிங்கம் ஆற்றிய சேவைகளை குத்தாலம் அஸ்ரப் அலி நினைவு கூர்த்தார்.
பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் பொன்னாடைகளும் நினைவுப்பரிசுகளும் சிறப்பு விருந்தினர் ராமலிங்கத்திற்கு வழங்கப்பட்டது. வானலை வளர்தமிழ் சார்பில் கவிஞர் ஜியாவுதீன் பொன்னாடை அணிவிக்க, கவிஞர் கீழைராசா நினைவுப்பரிசு வழங்கினார். நிகழ்ச்சியை குத்தாலம் அஸ்ரப் மற்றும் கவிஞர் காவிரிமைந்தன் ஆகியோர் தொகுத்து அளித்தனர்.
நம்பிக்கை சிறப்பிதழின் முதல் பிரதியை ராமலிங்கம் வெளியிட லிங்கண்ணன் பெற்று கொண்டார். இரண்டாம் பிரதியை கோவிந்தராஜ் வெளியிட நாகராஜ் பெற்று கொண்டார். அதேபோல மூன்றாம் இதழை மோகன் வெளியிட, பட்டணம் மணி பெற்று கொண்டார்.
வானலை வளர்தமிழ் அமைப்பிற்காக தொலைநகல்(பேக்ஸ்) கருவியை கோவிந்தராஜ் வழங்க அமைப்பின் பொதுச்செயலாளர் சிம்மபாரதி பெற்று கொண்டார். மரபு கவிஞர் அதிரை கவியன்பன் கலாம், தமிழ்த்தேர் சார்பில் சான்றிதழை ராமலிங்கம் வழங்கினார்.
நவம்பர் மாத தலைப்புகளாக ‘தாலாட்டு' மற்றும் ‘மை' அறிவிக்கப்பட்டது. சிம்மபாரதியின் நன்றியுரை உடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிந்தராஜ், குத்தாலம் அஸ்ரப், காவிரிமைந்தன், சிம்மபாரதி, கீழைராசா, ஜியாவுதீன் மற்றும் ஆதிபழனி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
-
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications