For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தி.சு.சதாசிவம் மறைவு

Google Oneindia Tamil News

மதுரை : சாகித்ய அகாதமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் தி.சு. சதாசிவம் திடீரென மறைந்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அவர்.

1997-ல் சாரா அபுபக்கரின் சந்திரகிரி ஆற்றங்கரையில் என்ற புகழ் பெற்ற கன்னட நாவலை மொழி பெயர்த்ததற்காக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. 25 க்கு மேற்பட்ட அவரது மொழி பெயர்ப்புகள் புத்தகமாக வெளிவந்துள்ளன.

மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளிலிருந்தும் பல நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

திருப்பூர் தமிழ்ச் சங்க விருது (1998), நல்லி திசை எட்டும் விருது (2006), நெய்வேலி புத்தக விழா குழுக் அளித்த வாழ்நாள் சாதனை விருது (2007) போன்ற பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக அவர் நடிப்பிற்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். மேலும், அவர் பல திரைப்படங்களில் குணச்சித்திரப் பாத்திரங்களிலும், பத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் மாற்றுத் திரைப்பட ரசனை இயக்கம் மற்றும் நாடக விமர்சனத்தின் முன்னோடிகளில் ஒருவராக சதாசிவம் திகழந்தார்.

சதாசிவத்திற்கு ஒரு மனைவியும் இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

English summary
Sahitya Academy Award winning writer Thi.Su. Sathasivam is dead. He was survived with a wife and 2 sons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X