நாளை ரியாத்தில் மாபெரும் ரத்ததான முகாம்
Subscribe to Oneindia Tamil
ரியாத்: ரியாத் மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நாளை கிங் ஃபஹத் யூனிவர்சிட்டியில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெறுகிறது.
ரியாத் மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் 24வது மாபெரும் ரத்ததான முகாம் நாளை ரியாத்தில் நடைபெறுகிறது. ரமலான் மாதத்தில் உம்ரா செய்யும் பணிகளில் விபத்துக்குள்ளாவோருக்கு இந்த முகாமில் பெறப்படும் ரத்தம் அளிக்கப்படும்.
ரியாத்தில் உள்ள கிங் ஃபஹத் யூனிவர்சிட்டியில் காலை 9 மணிக்கு துவங்கும் முகாம் மாலை 5 மணி வரை நடைபெறும்.
ரத்ததானம் செய்ய விரும்புவோர் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது குறித்து மேலும் விபரம் அறிய 057292857, 0542540860, 0500498772 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications