For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

11ம் தேதி சென்னையில் துபாய் பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: துபாய் பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் 11.08.2013 அன்று மாலை 6 மணிக்கு சென்னை தி.நகர் வாணி மஹாலில் நடைபெற இருக்கிறது.

துபாய் தமிழ்ச் சங்க பொருளாளர் கீதாகிருஷ்ணன் மற்றும் சந்திரா தம்பதியரின் புதல்வி கோபிகா கீதாகிருஷ்ணன், துபாய் தமிழ்ச் சங்க உறுப்பினர் சுரேஷ் கிருஷ்ணன் மற்றும் சீதாலட்சுமி தம்பதியரின் புதல்வி ஜனனி சுரேஷ் ஆகியோரின் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற இருக்கிறது. இருவரும் துபாய் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

Dubai girl students to perform their arangetram in Chennai on aug. 11

இந்நிகழ்ச்சியில் கலைமாமணி சங்கீத நாடக அகாடமி விருதாளர் நரசிம்மச்சாரி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.

கலைமாமணி ஷோபனா ரமேஷ், ஓகேஸ்வரி சண்முகநாதன், உமா மகேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். மாணவியரின் குரு கவிதா பிரசன்னா மற்றும் வாத்தியக் குழுவினர் பங்கேற்கின்றனர்.

துபாய் தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். அமீரகத்தில் தங்களது கலைத் திறனை வளர்த்து தாயகத்தில் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்ய இருக்கும் இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு எண் :

என். கீதா கிருஷ்ணன் : 98 408 27 463

மின்னஞ்சல் : [email protected]

English summary
TN girls Gopika Geethakrishnan and Janani Suresh's bharathanatya arangetram will be held in Chennai on august 11. All are invited.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X