செல்போனில் அதிகம் பேசினால் புற்றுநோய் ஆபத்து: எச்சரிக்கை ரிப்போர்ட்
ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன் என்ற பழமொழி போய் இப்போது செல் இல்லாத மனிதன் அரை மனிதன் என்று கூறும் அளவிற்கு புது மொழி வந்து விட்டது.
மனிதனின் ஆறாவது விரலைப் போல செல்போனும் ஒரு அங்கமாகி வரும் வேலையில் அதிகம் செல்போன் பேசினால் புற்றுநோய் பாதிப்பு வரும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
தினசரி செல்போன் பேசுவோருக்கு உடலில் ஏற்படும் பற்றி இஸ்ரேலில் உள்ள டெல்அவில் பல் கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் யனிவ் ஹம்ஷானி தலைமையிலான குழுவினர் ஒரு புதிய ஆய்வு மேற்கொண்டனர் அதில் அதிர்ச்சியளிக்கும் பல தகவல்கள் தெரியவந்தன.

காது சுரப்பி அடியாகுமாம்
செல்போன் பேசும் போது காதுகளின் அடியில் உள்ள சுரப்பிகள் மற்றம் திசுக்கள் பாதிக்கப்பட்டு மரபணு கோளாறினால் புற்று நோய் கட்டிகள் ஏற்பட வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சில் பரிசோதனை
இவர்கள் நீண்ட நேரம் செல்போன் பேசுபவர்களிடமும், செல்போன் பேசாதவர்களிடமும் இருந்து எச்சில் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

ரொம்ப பேசுனா கேன்சர்தான்
அவர்களில், அதிக நேரம் செல்போன் பேசுபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான அறிகுறி இருந்தது தெரிய வந்தது. அதன்படி, அதிக நேரம் செல்போன் பேசுபவர்களை புற்று நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

செல்போன் டிரைவிங்
ஒரு சிலர் சாலையில் வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசுகின்றனர். அவர்களின் கவனம் சாலையில் இருப்பதில்லை. இதுவும் உயிருக்கு ஆபத்தானதாக முடிகிறது.

செல்போனால் செத்தவர்கள்
அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் கடந்த 2011ம் ஆண்டு செல்போன் பேசியதன் மூலம் 3,331 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதுவே 2010ம் ஆண்டு 3,267 பேர் கொல்லப்பட்டனர். இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. எனவே தகவல் தொடர்புக்காக கண்டறியப்பட்ட ஒரு சாதனம் உயிருக்கு உலை வைக்கும் எமனாக மாறியுள்ளது என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications