இன்று துபாயில் மீலாத் பேச்சுப் போட்டி: வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மான் பங்கேற்பு
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் மீலாத் பேச்சுப் பொட்டி இன்று(11.01.2013) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல் கிஸஸ் அல்தவார் ஸ்டார் சர்வதேச பள்ளியில் ஸ்கூலில் நடைபெற இருக்கிறது.
'அண்ணல் நபிகளார் ஓர் அழகிய முன் மாதிரி' எனும் தலைப்பில் இல்லறம், வணிகம், வீரம், ஆட்சிமுறை, நட்பு, வணக்கம், பொறுமை, எளிமை, நேர்மை, விஞ்ஞானம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு உட்பிரிவில் பேசலாம்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் எம்.ஏ., எம்.பி. சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்வினை சிறப்பிக்க உள்ளார்கள்.
போட்டியாளர்கள் 15 வயது நிரம்பியிருக்க வேண்டும். தமிழில் மட்டுமே பேச வேண்டும். பேசுவதற்கான நேரம் 5 நிமிடங்கள். போட்டி நடைபெறும் அரங்கில் பேச்சாளர்கள் 15 நிமிடங்கள் முன்னதாக வந்து தஙக்ளது வருகையினை உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பம் மற்றும் விபரங்கள் பெற 056 684 71 20 / 050 51 96 433 / 055 41 45 064 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.