For Daily Alerts
Just In
ஷார்ஜாவில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உதவிய தஞ்சை மாணவர்
ஷார்ஜா: ஷார்ஜாவில் உதவும் கரங்கள் எனும் அமைப்பினை அமீரகத்தில் பயின்று வரும் தமிழகத்தின் தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த முஹம்மது ராசிக் ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஷார்ஜாவில் 06.07.2013 அன்று காலை கடும் வெயிலில் பணிபுரிந்து வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு குளிர்பானம், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்கு அல் ரவாபி குளிர்பான நிறுவனம், யுஏஇ எக்ஸ்ஜேஞ்ச் உள்ளிட்ட நிறுவனங்கள் அணுசரனை வழங்கியிருந்தன.
இது போன்ற சேவையின் நோக்கமாவது ஒவ்வொரு தனி மனிதனும் தம்மால் இயன்ற சேவைகளை செய்வதன் மூலம் பலரது வாழ்வில் மகிழ்வினை ஏற்படுத்தலாம் என்பதாகும்.
முஹம்மது ராசிக்கின் தந்தை அப்துல் ரவூஃப் அமீரகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
English summary
Tanjore based student Mohammad Rashikh who is studying in UAE helps the construction workers in Sharjah through his organization helping hands.
Story first published: Tuesday, July 23, 2013, 10:27 [IST]