துபாயில் தமிழ்த்துளி அமைப்பு நடத்திய திங்கள் திருவிழா மற்றும் நூல் வெளியீடு
துபாய்: துபாயில் தமிழ்த்துளி அமைப்பு நடத்திய திங்கள் திருவிழா மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி 12.04.2013 அன்று மாலை ஸ்டார் சர்வதேச பள்ளியில் சிறப்புற நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ்த்துளி அமைப்பின் தலைவி ப்ரியா விஜய் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சொல்லரசி தேச மங்கையர்கரசி பங்கேற்றார். அவர் குழந்தைகள் தாய்மொழியில் பேச வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திப் பேசினார். மேலும் குழந்தைகளின் திறன்களை கண்டறிந்து அதற்கேற்ப அவர்களது எதிர்காலக் கல்வியை அமைத்திட பெற்றோர்கள் துணை நிற்க வேண்டும் என்றார்.
தமிழக எழுத்தாளர் இளம்பிறை எம்.ஏ. ரஹ்மான் அவர்களின் காந்தி போதனை, மரபு, சிறுகை நீட்டி உள்ளிட்ட ஐந்து நூல்களை அறிமுகப்படுத்தி வெளியிட அதன் பிரதிகளை தேச மங்கையர்கரசி பெற்றுக் கொண்டார்.
சிறப்பு விருந்தினர்கள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இலங்கை எழுத்தாளர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த விழாவில் சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சிலவற்றைப் பார்ப்போம்...