அமீரக அரசின் உயரிய விருது பெற்ற தமிழர் லட்சுமணன்
Subscribe to Oneindia Tamil

துபாய் ஜுமேரா பீச் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கடந்த மாதம் 28ம் தேதி அமீரக அரசு விழா ஒன்று நடந்தது. இந்த விழாவில் துபாய் துறைமுகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய என்ஜினியர் லட்சுமணன் அவர்களுக்கு அமீரக அரசின் உயரிய விருதான தக்தீர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விருதை பெற்றுள்ள முதல் தமிழர் லட்சுமணன் ஆவார். அவர் தஞ்சை மாவட்டம் துவரங்குறிச்சி என்கிற கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் விருதை பெற்ற திரு. லட்சுமணனை துபாய் துறைமுக அதிகாரிகளும், நண்பர்களும் பாராட்டினார்கள்.












Click it and Unblock the Notifications