ஒயின் பாட்டில் கொடுத்தா உறவு நீடிக்குமாம்!... ஆய்வில் தகவல்
தம்பதியரிடையே வாரம் ஒருமுறை ஒயின் பாட்டில் பரிசளித்தால் மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை அமையும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மது அருந்தும் பழக்கமுள்ள 1500 ஜோடி தம்பதியரிடம் இது தொடர்பாக ஆய்வு நடைபெற்றது.
நியுசிலாந்தின் ஒடாகோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.
வாரம் ஒருமுறையாவது தங்களுக்குள் ஒயின் பாட்டில் பரிசளிப்பதாக பெரும்பாலான தம்பதியர் தெரிவித்தனர்.

ஒவ்வொரு சிறப்பான தருணங்களில் துணையைக் கவரவும், மகிழ்விக்கவும் ரோஜா பூ பரிசளிப்பதாக கூறினர்.
மனைவியோ, கணவரோ பரிசளிக்கும் மதுவினை அருந்துவதன் மூலம் திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதாகவும் 91 சதவிகித தம்பதியர் கூறினர்.
88 சதவிகிதம் பேர் மாதம் 3 முறை மதுபாட்டில் பரிசளிப்பதாக கூறினர். 69 சதவிகிதம் பேர் மதுபானங்களை பரிசளிப்பதில்லை என்று கூறினர்.
இந்த சர்வே மது அருந்தும் பழக்கமுள்ள தம்பதியர்களுக்குத்தான். நம் ஊரில் மணக்க மணக்க மல்லிகைப் பூ வாங்கித்தந்தாலே போதுமே மகிழ்ச்சிகரமான மண வாழ்க்கை நீடிக்கும் இல்லையா?












Click it and Unblock the Notifications