For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வசந்த் தங்கசாமியின் அவளதிகாரம்... நெல்லை கண்ணன் வெளியிட்டார்!

By Shankar
Google Oneindia Tamil News

வசந்த் தங்கசாமி எழுதி, அகநாழிகை பதிப்பகத்தின் வெளியீடான அவளதிகாரம் என்ற கவிதை நூலை சென்னையில் சனிக்கிழமை வெளியிட்டார் நெல்லைக் கண்ணன்.

இந்த கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை தி நகரில் உள்ள சர் பிடி தியாகராயர் அரங்கில் நடந்தது. விழாவுக்கு தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் தலைமையேற்றுப் பேசினார்.

Avalathikaaram poetry release

கவிஞர் சுமதி ஸ்ரீ, முனைவர் தமிழ்மாறன், முனைவர் சரவணவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அகநாழிகை பதிப்பகத்தின் சார்பில் பொன் வாசுதேவன் நன்றி கூறினார்.

Avalathikaaram poetry release

நூலாசிரியர் வசந்த் தங்கசாமி ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியை அனுக்ரஹா தொகுத்து வழங்கினார். கவிஞர் அறிவுமதி, பாடலாசிரியர் பழனிபாரதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை ஜாய்ஃபுல் க்ரை நிறுவனத்தின் பத்ரி மற்றும் ரமேஷ் கண்ணன் ஒருங்கிணைப்பு செய்தனர்.

English summary
Tamil laureate Nellai Kannan has released the poetry of Vasanth Thangasamy's Avalathikaram on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X