For Daily Alerts
Just In
துபாயில் தொழிலாளர்களுக்கு இடையேயான கேரம் போட்டி: எம்.பி.எம். அணி வெற்றி
துபாய்: துபாயில் தொழிலாளர்களுக்கு இடையேயான கேரம் போட்டியில் எம்.பி.எம். அணி வெற்றி பெற்றது.
துபாய் ஈடிஏ எம்.பி.எம். பிரிவில் தொழிலாளர்களுக்கு இடையே நடைபெற்ற கேரம் போட்டியில் 27.09.2013 அன்று மாலை இறுதிப் போட்டி நடைபெற்றது. பல்வேறு அணிகளுக்கு இடையே 20.09.2013 முதல் நடைபெற்ற போட்டியில் இருந்து நான்கு அணிகள் இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற்றன. இறுதிப் பொட்டியில் எம்.பி.எம். அணி சாம்பியன் பட்டம் வென்றது. பரிசினை நலத்துறை அலுவலர் பீர் முஹம்மது வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான அணுசரனையினை ஈஸிடாப் மற்றும் இன்டர்னேஷனல் மணி எக்ஸ்பிரஸ் ஆகியவை வழங்கியிருந்தன.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நலத்துறை அலுவலர் பாலரசு, முகாம் அலுவலர் நஜீப் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
நலத்துறை அலுவலர் பாலரசு நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
Comments
English summary
MBM team emerged the winner in the carrom competition conducted for workers of ETA MBM in Dubai.
Story first published: Sunday, September 29, 2013, 16:37 [IST]