3ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தின ஓவியப்போட்டி.. அசத்திய பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்!
பஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் மற்றும் கிம்ஸ் மருத்துவமனை இணைந்து மூன்றாவது ஆண்டாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உம்அல்ஹசம் பகுதியில் அமைந்துள்ள கிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் சார்பாக இப்போட்டி நடைபெற்றது.

சுமார் நூறு குழந்தைகள் கலந்துகொண்ட இவ்விழாவில் குழந்தைகள் சிறிய மற்றும் பெரிய என்ற வயது அடிப்படையில் பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற தலா மூன்று குழந்தைகளுக்கும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் லதா சக்திவேல் நடுவராக செயல்பட்டார். பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் பெ. கார்த்திகேயன், பொது செயலாளர் க. செந்தில்குமார், பஹ்ரைன் தமிழ் மங்கையர்கள் குழுவின் அமைப்பாளர் அனிதா கார்த்திகேயன் முன்னிலையில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

நியூ இந்தியன் பள்ளியின் முதல்வர் கோபிநாத் மேனன், ஊடகவியலாளர் பிரதீப், கிம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி அனஸ் பசீர், மருத்துவர் ரவி ஸ்ரீநிவாசன், சந்தைப்படுத்தும் அதிகாரி ராமீஸ் முகமது ஆகியோரை செயற்குழு உறுப்பினர்கள் கௌரவித்தனர்.

நிகழ்ச்சி பொறுப்பாளரான சங்க ஊடகத்துறை செயலாளர் செ. மதன்குமார் அவர்களை சிறப்பு விருந்தினர்கள் கௌரவித்தனர். அவர் பேசும்போது "நம்மிடம் இருப்பது ஒரே ஒரு உலகம் மட்டுமே, இன்று அனைத்து நாடுகளும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை வெப்பமயமாதல், அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறுகிறது" என்று கூறினார். இத்தகைய ஆரோக்கியமான செயல்களுக்காக பஹ்ரைன் வாழ் தமிழர்கள் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications