துபாய் அல் அய்ன் பூங்காவில் நடந்த ஈமான் செயற்குழு கூட்டம்
துபாய்: ஈமான் அமைப்பின் செயற்குழு கூட்டம் துபாயில் உள்ள அல் அய்ன் பூங்காவில் நடைபெற்றது.
துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் அல் அய்ன் பூங்காவில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மூத்த உறுப்பினர் படேஷா பசீர் இறைவசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவங்கினார். பொதுச் செயலாளர் லியாக்கத் அலி தலைமை வகித்தார். துணை பொதுச் செயலாளர் தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஈமான் கல்ச்சுரல் சென்டரின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக் குழு செயலாளர்கள் ஹமீது யாசின், சாதிக், கல்வித்துறை செயலாளர் அஞ்சுகோட்டை அப்துல் ரசாக், நலத்துறை செயலாளர் பைசுர் ரஹ்மான், ஐடி பிரிவு செயலாளர் இக்பால், அட்மின் செயலாளர் காதர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் வருங்காலத்தில் செயல்படுத்த உள்ள நல பணிகள் மற்றும் விழாக்கள் குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டது. ஈமான் அங்கத்தினர்கள் பல்வேறு ஆலோசனைகளை எடுத்துக் கூறினார். மேலும் விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் மூத்த செயற்குழு உறுப்பினர் படேஷா பசீர், சேக் அப்துல்லா, முஹம்மது ரபீக், ஹிதாயத்துல்லா, சாஹுல் ஹமீது, மெரிட்கான் முஸ்தபா, முஸ்தபா நூராணி, முபாரக் அலி, முஹம்மது அமீன், முஹம்மது ஷமீம், செய்யது பாஷா, கவுசர் பேக், தமீம் அன்சாரி, செய்யது அபுதாகிர், முஹம்மது சித்திக், உஸ்மான் அலி, ஷர்புதீன், முஹம்மது சலாஹீதீன், எஸ்கேவி சேக், முஹம்மது அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications