தம்மாமில் நடந்த இந்தியன் சோஷியல் ஃபோரம் மாநில நிர்வாக குழு கூட்டம்!
தம்மாம்: தம்மாமில் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
சவுதி அரேபியா இந்தியன் சோஷியல் ஃபோரம் கிழக்கு மாகாண தமிழ் பிரிவின் மாநில நிர்வாக குழு கூட்டம் தலைவர் காயல் அபுபக்கர் தலைமையிலும், தேசிய துணைத் தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி முன்னிலையிலும் தம்மாமில் நடைபெற்றது.
கூட்டத்தில் தற்போதைய இந்திய அரசியல் நிலவரம் குறித்தும், எதிர்வரும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
முடிவில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை மிகவும் சிறப்புடன் தம்மாமில் நடத்துவதென்றும், தமிழ் பேசும் சொந்தங்களை அழைத்து நிகழ்ச்சியை சிறப்பாக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் காயல் மக்தூம் நைனா, துணை தலைவர் நியாஸ் அகமது, கோபார் தலைவர் கீழை ரமீஸ்தீன், சிஹாத் தலைவர் மல்லிப்பட்டினம் அஸ்கர், யாசர் அரபாத், மேலிட பார்வையாளர் நாகூர் மீரான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.