இது வீர விளையாட்டு கூட்டம்... அமெரிக்காவிலிருந்து ஒரு உணர்ச்சிக் கவிதை!
ஜல்லிக்கட்டு குறித்து அமெரிக்காவில் வசித்து வரும் தமிழர் மாணிக்கம் விஜயபானு எழுதியுள்ள கவிதை.
நிறத்தில் கருப்பென்ன, சிவப்பென்ன..
பண்டிகையில் வடக்கென்ன..தெற்கென்ன..
எட்டுதிக்கும் என் இனம்..!
எண்ணிலடங்கா மொழி கொண்ட என் நாட்டில்..
கடவுளும் வீரன்தான்..என் கண்ணில்.!
வேல் வைத்த முருகனும்...கார்த்திகேயனும்..
சூலம் ஏந்திய சிவனும்..
அம்பு வைத்த ராமனும்..
சிங்கம் தரித்த துர்க்கையும்..
சக்கரம் கொண்ட விஷ்ணுவும்..

இது...வீர விளையாட்டு கூட்டம்.!
இதில் வந்தது என் இனம்...!
இப்போது..
"ஏறு தழுவுதலை" மட்டும்
வீரத்தின் விழைதழலாய் ஏற்க மறுத்தல்ஏனோ.?!
முன்னது கடவுள் என்ற பயமா?
மனிதத்திலும் உள்ளது கடவுள்..!
வரலாற்றை புரட்டு...புரியும்.
"காந்தளூர்ச்சாலை" யும்..."கலிங்கத்துபரணி" யும்
கண்டெடுத்த சோழ வீரன்
விட்டுச் சென்றது - "பிரகதிஸ்வரர்ஆலயம்.!"
சங்கம் வளர்த்த தமிழ் காதலன் - பாண்டியன்
கடைந்து எடுத்தது - மதுரை மீனாட்சி..!
ஒன்றா..இரண்டா..!
வீரத்திற்கு இல்லை வடிவம்..!
எல்லையில் எதிரியை கொல்வது - வீரம்..!
எதிரியை எதிர்த்து கொல்லப்படுவதும் -வீரம்..!
அண்டம் கடந்த அறிவியல் தேடல் - வீரம்.!
"காந்தி" காதல் கொண்ட - அஹிம்சையும் - வீரம்..!
"ஹோலி" யும், "ரக்ஷபந்தன்" னும்
தேசிய பண்டிகை எனில்..
"பொங்கல்" மட்டும் போகியில்
போட்டுக் கொளுத்தவா?
விருப்ப கணக்கில் விடுப் புஎடுக்க...
மகளிருக்கு மட்டும் தரும் - பிரசவ விடுப்பா
பொங்கல் பண்டிகை.?!
தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு..
நன்னூல்..."ஆற்றுப்படை" - இன்னும்..இன்னும்..
தமிழின் ஆதிமூலம் அறியாதவர்க்கு
"ஏறு தழுவுதல்" வரலாறு மட்டும்
புரியவா போகிறது?!
"உழவுக்கு வந்தனம் செய்வோம்"
என்ற வரி புரியவில்லை எனில்..
தமிழ் படிக்க கற்றுக்கொள்..!
உலக உருண்டையில் நம்மூத்தோர் தடத்தை
அது காட்டும்..!
"ஓடி விளையாடு"..."கூடி விளையாடு"
தெரிந்த செந்தமிழுக்கு..
"ரௌத்திரம்பழகு" நன்றாகவேதெரியும்..!
சட்டங்கள் இருப்பதும்...இயற்றுவதும்..
சந்தோசத்தின் வாசலை காண மட்டுமே..!
சங்கடங்கள் சங்கமிக்க அல்ல..!
ஆற்று வழி நாகரிகம் விட்டுச் சென்ற
வரலாறை போற்ற வேண்டாம்..!
புதைக்க புறப்படாதே..!
கழனி போற்று..
உழவன் போற்று..
விவசாயம் வணங்கு..!
- மாணிக்கம் விஜயபானு












Click it and Unblock the Notifications