"காகிதப் பூக்கள்".. புத்தம் புதிய நெடுந்தொடர் - அத்தியாயம் 1
எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் முதல் அத்தியாயம் இது.
- லதா சரவணன்
(சென்னையில் இருந்து 200கிமீ தொலைவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டைக்கு அருகில் உள்ளது கூவாகம் எனும் ஊர். சித்ரா பெளர்ணமி அன்று உலக கவனத்தையெல்லாம் தன்பால் ஈர்க்கும் கூவாகம் அர்ஜீனின் மகனான அரவான் என்பவர்தான் இங்கு கூத்தாண்டவராக எழுந்தருளி தன்னை மானசீக கணவனாக வணங்கும் அரவாணிகளுக்கு அருள் பாலித்து வருகிறார்)
அன்று வந்த கடிதங்களைப் படித்து அதற்கு பதில் குறிப்புகள் தயார் செய்து கொண்டு இருந்தான் கவின். ஆபீஸீல் ஏறத்தாழ எல்லோரும் கிளம்பிக் கொண்டு இருந்தார்கள். அவன் கைபேசி அழைத்தது. டிஸ்பிளேயில் மனைவி வித்யாவின் புன்னகை ததும்பும் முகம். கவினும், வித்யாவும் காதல் மணம் புரிந்தவர்கள்.

அளவில்லாத சொத்து சுகம் இத்தனை இருந்தும் மணமாகி ஐந்து வருடங்களாய் குழந்தை இல்லை. வேண்டாத கோயில்களும் ஏறாத மருத்துவமனைகளும் இல்லை! கடைசியில் கடவுளின் அருளோ அல்லது மருந்துகளின் உபயோகமோ அழகான ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தாள் வித்யா.
இழந்த சந்தோஷம் மீண்டுவந்தது. கூடவே இடியாய் செய்தியும்.! வித்யாவின் கருப்பைக்கு மற்றொரு குழந்தையைத் தாங்கும் அளவிற்கு சக்தி இல்லையென்பதால், அதை எடுக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லிட கவினும் ஒப்புக்கொண்டான்.
மகன் ஜீவன் வளர வளர சந்தோஷமும் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்தது. அவனின் மழலை மொழியும் நிற்கும் போதும், நடக்கும்போதும், ஒவ்வொரு செயலுக்கும் மகிழ்ந்தார்கள். கராத்தே, நாட்டியம், நீச்சல் என அவன் விரும்பும் பயிற்சிகளைத் தந்தார்கள்.

இன்று அவனுக்கு டிராயிங் கிளாஸ். முடிந்தவுடன் டிரைவின் கூட்டிப்போவதாய் சொல்லி இருந்தான் கவின். அதை நினைவுபடுத்திடத்தான் இந்த போன் போலும். சிரிப்புடன், இன்னும் கிளம்பலையா ? என்று கேட்டு தாயிடமும், மகனிடமும் அர்ச்சனையை எதிர்பார்த்தபடியே, எடுக்கலாமா ? இல்லை கிளம்பலாமா? என்று சில நிமிட யோசனைக்குப்பிறகு, அலைபேசியை உயிர்ப்பித்தான் கவின்,
"ஹலோ.......!"
"என்னங்க..." வித்யாவின் குரலில் பதட்டம்?!
"வந்துட்டேன் வித்யா....இன்னும் அரைமணிநேரம் ...".
"ஏங்க,.,,, நம்ம ஜீவன் இன்னமும் வீட்டுக்கு வரலை ! டிரைவர் எண்ணிற்குப் போன் பண்ணினா ரிங் போயிட்டே இருக்கு ? எனக்கு பயமாயிருக்குங்க?"
"ஏய்! ஏதாவது வேலையிருந்திருக்கும்,,,, இல்லேன்னா வழக்கம்போல ஏதாவது ஐஸ்கிரீம் கடைக்கு கூட்டிப்போய் இருப்பான். கவலைப்படாதே நான் கோச்சிங் சென்டர் போய் விசாரிச்சிட்டு வந்திடறேன்" போனை வைத்தவுடன் இலேசாய் அவனுக்குமே பதட்டம்.
(தொடரும்)
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications