'இன்னும் நேரம் இருக்கிறது திமுக இறங்கிவர!'
-கதிர்
1.பிரேமலதா பேச்சு சூப்பர்ப்.
2.கேப்டன் ஒருவழியா சஸ்பென்சை உடைச்சதுல நிம்மதி.
3.ஸ்டாலினோட ஓவர் கான்ஃபிடன்ஸ் பலூன்ல ஊசி குத்திருக்கார் கேப்டன்.
4.கூட்டணி ஆட்சிக்கு இப்ப சம்மதிக்கலைன்னா, தேர்தலுக்கு அப்புறம் சம்மதிக்க போறீங்க என்பது கேப்டன் மெசேஜ்.

5.தேமுதிக இதனால் இழக்க எதுவும் இல்லை.
6.திமுக இதனால் அனைத்தையும் இழக்க வாய்ப்பு இருக்கிறது.
7.இன்னும் நேரம் இருக்கிறது திமுக இறங்கிவர.
8.ஈகோ தடுத்தால் அம்மாவுக்கு அதிர்ஷ்டம்.
9.மநகூ, பாமக 'லக்'கும் ஏறுமுகம்.
பி.கு: ஊழல், நிர்வாக சீர்கேடு மலிந்த அதிமுக ஆட்சி போதும் என்று மக்கள் நினைப்பது நிஜம். அதனால் ஆட்டோமேடிக்கா திமுகவுக்குதான் ஓட்டு போடுவார்கள் என்பது நிஜமல்ல. குடும்பச் சண்டையால் அதன் நம்பக தன்மை சிதைந்து போனது. அது இப்போது தரும் வாக்குறுதிகள் ஓகே. ஆனால் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உதிக்கவில்லை.
கோமாளியாக சித்தரிக்க பட்டாலும் கேப்டன் கூட இருந்தால் நிறைவேற்ற வைப்பார் என மக்கள் நம்புகிறார்கள். ஊடகர்கள் பலரும் கேப்டனை க்லோசப்பில் மானிட்டர் பண்ணி கொண்டிருந்த காலத்தில் அவரது ரசிகர்களை களத்தில் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்:
தேமுதிகவை குறைத்து மதிப்பிடாதீர்கள். கேப்டனைச் சொல்லவில்லை. அவரைவிட கீழே உள்ள கிருஷ்ணசாமி, சரத்தை கூட திமுக விட்டிருக்க கூடாது. தென் தமிழகத்தை அறிந்தவர்களுக்கு புரியும்!












Click it and Unblock the Notifications