ஞாபகம் வருதே..: 18 ஆண்டுகளுக்கு பிறகு துபாயில் சந்தித்த முஹம்மது சதக் கல்லூரி முன்னாள் மாணவர்கள்
துபாய்: அமீரகத்தில் வசித்து வரும் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் (1993-1997 BATCH) 18 வருடங்களுக்குப் பிறகு, அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு டிசம்பர் 3ம் தேதி துபாய் முஸ்ரிப் பூங்காவில் ஒன்று கூடினார்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் ஆரம்பகட்டமாக அறிமுக படலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புச்செழியன் கடந்து வந்த பாதை குறித்து பேசினார். பின்பு உரையாற்றிய முன்னாள் மாணவர் கீழைராஸா கல்லூரி அனுவங்களை கவிதையாக வாசித்தார்.

மதிய உணவு இடைவேளைக்கு பின் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் ரத்ததானம், தமிழக வெள்ள நிவாரண நிதியுதவி உட்பட பல சமூக சேவை சம்பந்தமான சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முகம்மது சதக் பொறியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் இப்ராகிம், மறைந்த மாணவர்கள் விமல்குமார், தாமஸ் டேவிட் ஆகியோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிறைவாக ஒருங்கிணைப்பாளர் தாஜுதீன் நன்றி உரை நிகழ்த்த, அனைவரும் பிரியா மனதுடன் பிரிந்து சென்றார்கள். நிகழ்ச்சியில் பெரும்பாலான முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications